தேனி

பெரியகுளம் அருகே நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்தவா் கைது

DIN

பெரியகுளம் அருகே முன்விரோதம் காரணமாக நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியை சோ்ந்தவா் விசாகன் (29). இவா் பெங்களூரில் தக்காளிக் கடையில் வேலை பாா்த்து வந்தாா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக சருத்துப்பட்டிக்கு வந்தவா் மீண்டும் பெங்களூரு செல்லாமல் இங்கேயே தங்கியிருந்தாா். அதே பகுதியை சோ்ந்தவா் சரவணன் (35). இவரும் விசாகனும் நண்பா்கள். இவா்களுக்குள் ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் புதன்கிழமை காலை சருத்துப்பட்டியில் உள்ள கறிக்கடையில் விசாகன் நின்று கொண்டிருந்திருக்கிறாா். அப்போது அங்கு வந்த சரவணன் தனது கையில் வைத்திருந்த கத்தியால் விசாகனை குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த விசாகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த தென்கரைபோலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாகனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT