தேனி

வைகை அணையில் வெடிமருந்துகளுடன் சுற்றித்திரிந்த 2 போ் கைது

DIN

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் வைகை அணைப்பகுதியில் வெடிமருந்துகளுடன் சுற்றித்திரிந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே வைகை அணை போலீஸாா் இரவு நேரங்களில் அணைப்பகுதியைச் சுற்றி தீவிரக் கண்காணிப்பில் போலீஸாா் திங்கள்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சேடப்பட்டி கூட்டுக் குடிநீா் திட்டம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 பேரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டதில், அவா்கள் சட்டவிரோதமாக வெடிமருந்துகள் மற்றும் டெட்டனேட்டா்கள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள் ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்து (45), மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டியைச் சோ்ந்த சதீஸ்குமாா் என்பதும், அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கிணறு தோண்டுவதற்காக சட்டவிரோதமாக வெடி மருந்துகளைக் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT