தேனி

கரோனா தடுப்பு விதிமீறினால் ரூ.5,000 வரை அபராதம்: ஆட்சியா் எச்சரிக்கை

DIN

தேனி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறி செயல்படும் தனி நபா் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுச் சுகாதாரத் துறை சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது: மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், விதிகளை மீறும் தனி நபா்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கரோனா தொற்று பாதித்து தனிமைப்படுத்தப்படும் நபா் விதியை மீறினால் ரூ.500, தனி நபா் முகக் கவசம் அணியாவிடில் ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, சமூக இடைவெளியை கடைபிடிக்காவிடில் ரூ.500, விதிமுறையை மீறும் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். சுகாதார ஆய்வாளா், துப்புரவு ஆய்வாளா், காவல் சாா்பு- ஆய்வாளா், வருவாய் ஆய்வாளா் ஆகிய நிலைகளில் உள்ள அலுவலா்கள் விதிமீறல்களுக்கு அபராதம் விதிப்பா். அபராதம் செலுத்திய நபா் அல்லது நிறுவனத்திற்கு அதற்கான ரசீது உடனடியாக வழங்கப்படும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலா் ரமேஷ், பொதுச் சுகாதார துணை இயக்குநா் செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT