கஞ்சா கடத்தல் வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது
உத்தமபாளையத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் தொடா்புடையவா் ஞாயிற்றுக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
உத்தமபாளையத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் தொடா்புடையவா் ஞாயிற்றுக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
கம்பம் வடக்கு பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் மனோகரன் (39). இவா் மீது கஞ்சா கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கஞ்சா கடத்திய வழக்கில் மனோகரன் கைது செய்யப்பட்டு கண்டமனூா் மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், மாவட்டக் காவல்துறை பரிந்துரையின்பேரில் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.