கரோனா பரவல் எதிரொலி: மேகமலை- ஹைவேவிஸ் மலைச்சாலை மூடல்
கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் மேகமலை- ஹைவேவிஸ் மலைச் சாலையும், சுற்றுலாத் தலங்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் அடைக்கப்பட்டன.
கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் மேகமலை- ஹைவேவிஸ் மலைச் சாலையும், சுற்றுலாத் தலங்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் அடைக்கப்பட்டன.
இதுகுறித்து சின்னமனூா் வனத் துறையினா் கூறியது: கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் கூட்டம் கூடும் சுற்றுலாத் தலங்களை மூடவேண்டும் என தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது. அதன்படி, மேகமலை- ஹைவேவிஸ் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை.
மறு உத்தரவு வரும் வரை மலைப்பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை. இதுகுறித்த அறிவிப்புப் பதாகையும் அங்குள்ள மலை அடிவாரச் சோதனைச் சாவடியில் வைக்கப்பட்டுள்ளது என்றனா்.
சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்: மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காரில் வந்த நுற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தனா். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் அவா்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனா்.