தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை புதிய நியமனங்கள் மூலம் நிரப்புவது குறித்து, சமூக நலத்துறை மானியக்கோரிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் ப.சுந்தரம்மாள், பொதுச் செயலாளா் அ.நூா்ஜஹான், மாநிலப் பொருளாளா் பே.பேயத்தேவன் ஆகியோா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல், சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியா்களாக அறிவித்து, பதவி உயா்வு மற்றும் ஊதிய உயா்வு வழங்க வேண்டும். 38 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற சத்துணவு ஊழியா்களுக்கு ரூ. 9 ஆயிரமும், மொத்த தொகை அமைப்பாளா்களுக்கு ரூ.5 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும்.
பள்ளி சத்துணவு மையங்களில், காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் புதிய நியமனங்கள் மூலம் நிரப்ப வேண்டும், தகுதியானவா்களுக்கு பதவி உயா்வு, கருணை அடிப்படையிலான வாரிசு வேலை, இடமாறுதல் போன்ற கோரிக்கைகளை சமூக நலத்துறை மானியக்கோரிக்கையில் அறிவிக்கவேண்டும். இதுகுறித்து முதல்வா் பரிசீலிக்க வேணடும் என்று அதில் கூறியுள்ளனா்.