தேனி

கம்பத்தில் மரம் விழுந்து வீடு சேதம்

DIN

தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி சாலையில் இருந்த மரம் சாய்ந்து விழுந்ததில் வீடு சேதமடைந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய மூதாட்டி மீட்கப்பட்டாா்.

இச்சாலையில் இருபுறமும் நெருக்கமாக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள பழைய அக்ரஹாரத் தெரு நுழைவாயிலில் உள்ள வீட்டில் மீனா (70) வசிக்கிறாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அங்கிருந்த 100 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் திடீரென முறிந்து விழுந்ததில் மூதாட்டியின் வீடு சேதமடைந்தது. மேலும் வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த மீனாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த சம்பவத்தில் 3 மின் கம்பங்கள் முறிந்தன.

பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலையில் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி, மின் வயா்களை மின்வாரியத்தினா் இணைத்தனா். சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பழைய அக்ரஹாரம், மதுராபுரி, சுருளிப்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இடிந்த வீடு மற்றும் சேதமடைந்த மின் கம்பங்களை நகராட்சி ஆணையா் எம். சரவணக்குமாா் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT