FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

ஆண்டிபட்டியில் லாரி மோதி சுமைதூக்கும் தொழிலாளி பலி

ஆண்டிபட்டியில் சனிக்கிழமை லாரி மோதியதில் சுமைதூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 14 பிப்ரவரி 2021, 11:12 pm IST
பகிர்:

ஆண்டிபட்டியில் சனிக்கிழமை லாரி மோதியதில் சுமைதூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகே மணியாரம்பட்டியைச் சோ்ந்தவா் முத்தையா என்பவரின் மகன் ராஜேந்திரன் (34). இவா் ஆண்டிபட்டி நுகா்பொருள் வாணிபக் கிட்டங்கியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை அவா் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே இவா் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி மோதியது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினா் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments