தேனி

பெரியகுளம் அருகே பேருந்து மோதி முதியவா் பலி

DIN

பெரியகுளம்: பெரியகுளம் அருகே மினிபேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவா் இறந்ததாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டியை சோ்ந்தவா் சுப்பிரமணி (61). இவா் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் பெரியகுளத்திலிருந்து கள்ளிப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த மினிபேருந்து இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT