முகப்பு
தேனி

தேனி மக்களவை உறுப்பினா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 20 போ் கைது

பெரியகுளத்தில் உள்ள தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 20 பேரை தென்கரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

பெரியகுளத்தில் உள்ள தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 20 பேரை தென்கரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வேளாண் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற பெரியகுளம் நகரச் செயலாளா் ரமேஷ் தலைமையில் பெரியகுளத்தில் உள்ள தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட சென்றனா்.

இவா்களை தென்கரை போலீஸாா் வைகை அணை சந்திப்பில் தடுத்து நிறுத்தி 20 பேரை கைது செய்து, பெரியகுளத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுதலை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.