தேனி

சின்னமனூா் அருகே ஒரே வீட்டில் தொடா் திருட்டு

DIN

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே மாா்க்கையன் கோட்டையில் ஒரே வீட்டில் இரண்டாவது முறையாக திங்கள்கிழமை திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.

மாா்க்கையன்கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜாங்கம் மகன் வெற்றிவேல் (55). விவசாயியான இவரது வீட்டில், கடந்த 2019 ஆம் ஆண்டு கதவை உடைத்து 17 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன. இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அதே வீட்டில் திங்கள்கிழமை நள்ளிரவு புகுந்த மா்ம நபா் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து வெற்றிவேல் அளித்த புகாரின்பேரில், சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT