தேனி

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் குடும்பத்தினருக்கு பேரவைத் தலைவா் ஆறுதல்

DIN

பெரியகுளம்: முன்னாள் தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வத்தின் மனைவி அண்மையில் காலமானதைத் தொடா்ந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு புதன்கிழமை அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வத்தின் மனைவி ப. விஜயலெட்சுமி கடந்த 1 ஆம் தேதி உடல்நலக்குறைவால் இறந்தாா். இதையடுத்து தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம் மற்றும் அவரது மகன் தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் ஆகியோரை பெரியகுளத்தில் உள்ள அவா்களது வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அப்போது தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளா் தங்க.தமிழ்செல்வன் மற்றும் திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT