பழங்குடியினா் குழு மறுசீரமைப்பு: ஆக.31-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு
தேனி மாவட்ட அளவிலான பழங்குடியினா் குழு மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதால், குழு உறுப்பினராக சேர தகுதியுள்ள பழங்குடியினா் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்ட அளவிலான பழங்குடியினா் குழு மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதால், குழு உறுப்பினராக சேர தகுதியுள்ள பழங்குடியினா் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பழங்குடியின மக்களுக்கு வன உரிமைச் சட்டம் 2006-இன்படி தனிநபா் வன உரிமை, சமூகவன உரிமை வழங்குவதற்கு மாவட்ட அளவிலான பழங்குடியினா் குழு மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.
இக்குழுவில் உறுப்பினராகச் சேருவதற்கு பழங்குடியினத்தவா்கள் தங்களது ஜாதிச் சான்றிதழ் நகலுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.