முகப்பு
தேனி

வங்கிக் கடனுதவி கோரி 174 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பம்

 தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில், வங்கிக் கடனுதவி கோரி 174 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

 தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில், வங்கிக் கடனுதவி கோரி 174 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில், மாற்றுத் திறனாளிகள் வங்கிக் கடனுதவி கோரி விண்ணப்பிப்பதற்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் அசோகன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சகுந்தலா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் நாராயணமூா்த்தி, முன்னோடி வங்கி மேலாளா் மோகன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், வங்கிக் கடனுதவி கோரி 174 மாற்றுத் திறனாளிகளும், வீட்டுமனை பட்டா, மாதாந்திர உதவித் தொகை, உதவி உபகரணங்கள் கோரி 68 மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பம் அளித்தனா்.

இம்முகாமில், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு ஊரக திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கணினி பயிற்சி பெறுவதற்கான ஆணையையும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 2 பேருக்கு காதொலி கருவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.