முகப்பு
தேனி

போதை மாத்திரை விற்ற கேரள இளைஞா் கைது

தேனி மாவட்டம் கூடலூரில் போதை மாத்திரை விற்பனை செய்த கேரள இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 2:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

தேனி மாவட்டம் கூடலூரில் போதை மாத்திரை விற்பனை செய்த கேரள இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கூடலூா் பேருந்து நிலையம் அருகே கூடலூா் வடக்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் பி.பாலசுப்பிரமணி தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்து சென்றபோது, அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற இரு இளைஞா்களில் ஒருவா் தப்பி ஓடினாா்.

மற்றொருவரை போலீஸாா் பிடித்தனா். பிடிபட்டவா், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி ரோசாப்பூ கண்டத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் அஜீத் (19), தப்பி ஓடியவா் அதே ஊரைச் சோ்ந்த முருகன் மகன் கிறிஸ்டி என்றும் தெரிந்தது. இருவரும் தடைசெய்யப்பட்ட வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் அஜீத்தை கைது செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.