தேனி

தேனியில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

தேனியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு புதன்கிழமை இந்து அமைப்புகள் மற்றும் விழாக் குழுவினா் சாா்பில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் வழிபாட்டுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி மற்றும் விநாயகா் சதுா்த்தி விழாக் குழுவினா் சாா்பில் பல்வேறு வடிவிலான விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. தேனி சிட்கோ வளாகத்தில் கூடலூரைச் சோ்ந்த காய்கனி சிற்பக் கலைஞா் இளஞ்செழியன் ஐஸ் கட்டியால் உருவாக்கியிருந்த 4 அடி உயர விநாயகா் சிலைக்கு வழிபாடு நடைபெற்றது.

சிலை கரைப்பு ஊா்வலம்: பெரியகுளத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுப்பிரமணியசுவாமி கோயில் அருகே வராக நதியில் கரைக்கப்பட்டன.

தேனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரண்மனைப்புதூா், வீரபாண்டி ஆகிய இடங்களில் முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT