தேனி அருகே பள்ளி மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை
தேனி அருகே பள்ளி மாணவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தேனி அருகே பள்ளி மாணவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
அம்பாசமுத்திரம் மேலப்பட்டியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி. இவரது மகன் வெங்கடாச்சலபுரத்தில் உள்ள வேங்கடரமணா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா், கடந்த சில நாள்களாக பள்ளிக்குச் செல்ல பிடிக்கவில்லை என்று கூறி வீட்டிலேயே இருந்து வந்தாராம். இந்நிலையில், வீட்டில் தனிமையில் இருந்த மாணவா் முற்றத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தமிழ்ச்செல்வி அளித்த புகாரின்பேரில், கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.