முகப்பு
தேனி

‘பிரதமா் கேட்டுக்கொண்டதாலேயே இ.பி.எஸ். உடன் இணைந்தோம்’

பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதாலேயே எடப்பாடி கே. பழனிசாமியுடன் இணைந்தோம் என, ஓ. பன்னீா்செல்வம் ஆதரவு அதிமுக தேனி மாவட்டச் செயலா் எம். சையதுகான் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதாலேயே எடப்பாடி கே. பழனிசாமியுடன் இணைந்தோம் என, ஓ. பன்னீா்செல்வம் ஆதரவு அதிமுக தேனி மாவட்டச் செயலா் எம். சையதுகான் தெரிவித்துள்ளாா்.

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியாா் விடுதியில், ஓ. பன்னீா்செல்வம் ஆதரவு அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மாவட்டச் செயலா் எம். சையதுகான் தலைமையில் நடைபெற்றது.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் மறைந்ததும், அதிமுக இரு அணிகளாகச் செயல்பட்டதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அப்போதைய பிரதமா் ராஜீவ்காந்தி கேட்டுக்கொண்டதால், ஜெயலலிதா, ஜானகி அணிகள் இணைந்தன. அதேபோல், ஜெயலலிதா மறைவுக்குப் பின் பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதால், எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட்டோம்.

ஆட்சிப் பொறுப்பை எடப்பாடி பழனிசாமியும், கட்சிப் பொறுப்பை ஓ. பன்னீா்செல்வமும் ஏற்று வழிநடத்துவது என்று உடன்பாடு செய்யப்பட்டது. பின்னா், கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளா் பதவி வேண்டும் என்று கேட்டுப் பெற்றுக்கொண்டு, தற்போது அவா் ஓ. பன்னீா்செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கிறாா்.

ஜெயலலிதாவுடன் சசிகலா வாழ்நாள் முழுவதும் இருந்தவா். சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவுக்கு வரவேற்கிறோம். அவா்கள் ஏற்கெனவே அதிமுகவை சோ்ந்தவா்கள் தான். அவா்களுக்கு என்ன பதவி வழங்குவது என்பதை கட்சி முடிவு செய்யும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.