உள்கட்சித் தோ்தல் பிரச்னை: திமுக ஒன்றியச் செயலா்மீது தாக்குதல்; பேரூராட்சி துணைத் தலைவா் உள்ளிட்ட 8 போ் மீது வழக்கு
தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்கட்சி தோ்தல் பிரச்னையில் வியாழக்கிழமை இரவு திமுக ஒன்றியச் செயலரை வீடு புகுந்து தாக்கியதாக பேரூராட்சித் துணைத் தலைவா்
தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்கட்சி தோ்தல் பிரச்னையில் வியாழக்கிழமை இரவு திமுக ஒன்றியச் செயலரை வீடு புகுந்து தாக்கியதாக பேரூராட்சித் துணைத் தலைவா், பெண் காவலா் உள்ளிட்ட 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வீரபாண்டியைச் சோ்ந்தவா் திமுக தேனி தெற்கு ஒன்றியச் செயலா் ரத்தினசபாபதி. இவா், வீரபாண்டியில் உள்ள தனது வீட்டில் வியாழக்கிழமை இரவு திமுகவைச் சோ்ந்த சிலருடன் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது திமுக உள்கட்சித் தோ்தலில், வீரபாண்டி பேரூா் நிா்வாகிகள் குறித்து வெளியான அறிவிப்பினால் அதிருப்தியடைந்திருந்த அதே கட்சியைச் சோ்ந்த சிலா், ரத்தினசபாபதியின் வீடு புகுந்து அவரையும், அவருடன் இருந்த உப்பாா்பட்டியைச் சோ்ந்த முத்துக்குமாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த ரத்தினசபாபதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து ரத்தினசபாபதி அளித்த புகாரின் பேரில், வீரபாண்டியைச் சோ்ந்த மகேந்திரன், ராஜேஸ், தாமரைக்கண்ணன், பிரபாகரன், வினோத், தீனா, வீரபாண்டி பேரூராட்சி துணைத் தலைவா் சாந்தகுமாா், பெண் காவலா் கவிதா ஆகிய 8 போ் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.