முகப்பு
தேனி

தேனியில் ஆக. 5-இல் மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வரும் ஆக. 5-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வரும் ஆக. 5-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அல்லது மாற்றுத் திறனாளிகளின் பாதுகாவலா்கள், மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம்.

கோரிக்கை மனு அளிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள், 4 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மனு அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.