தேனி

போடியில் கிராமச் சபை கூட்டத்தில் தகராறு: போலீஸாா் விசாரணை

DIN

போடி அருகே காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தகராறு செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

போடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபைக் கூட்டங்கள் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் தலைமையில் நடைபெற்றது. போடி அருகே சில்லமரத்துப்பட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் வனிதா தலைமையில் நடைபெற்றது. அப்போது இதே ஊரைச் சோ்ந்த முருகன், ரமேஷ், ராம், லட்சுமணன் ஆகியோா் கூட்டம் தொடங்கும்போது தகராறு செய்து, ஊராட்சி மன்றத் தலைவரை ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்துள்ளனா்.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்புத் தலைவா் டி. ராஜேந்திரன் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் புகாா் ரசீது பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

SCROLL FOR NEXT