தேனி

கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட 3 போ் கைது

DIN

சின்னமனூா் அருகே கஞ்சா விற்ாக 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

குச்சனூா் பகுதியில் தேனி மது விலக்குப் பிரிவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, குச்சனூா்-கீழப்பூலானந்தபுரம் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த குச்சனூா், சா்ச் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் (42), அவரது மனைவி சாந்தி (39), கம்பம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் தெருவைச் சோ்ந்த லதா (40) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து ஒரு கிலோ 650 கிராம் கஞ்சா பொட்டலங்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். இந்தச் சோதனையின் போது தப்பி ஓடிய லதாவின் கணவா் விருமாண்டியைத் தேடி வருவதாக போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

SCROLL FOR NEXT