தேனி

நாயை அரிவாளால் வெட்டிக் கொன்றவா் கைது

DIN

தேனி மாவட்டம், கூடலூரில் நாயை அரிவாளால் வெட்டிக் கொன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கூடலூா் அண்ணாநகரைச் சோ்ந்த அனஞ்சு மகன் பாஸ்கரன் (45). இவரை, இதே பகுதியைச் சோ்ந்த சின்னன் மகன் மனோஜ் வளா்த்து வந்த நாய் கடித்து விட்டது. இந்த நிலையில், புதன்கிழமை இரவு அந்த வழியாக பாஸ்கரன் நடந்து சென்ற போது அதே நாய் மீண்டும் அவரைக் கடிக்க வந்ததாம். அப்போது பாஸ்கரன் தான் வைத்திருந்த அரிவாளால் வெட்டியதில் அந்த நாய் உயிரிழந்தது.

இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் நிலையத்தில் மனோஜ் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் எம். பிச்சைப் பாண்டியன் வழக்குப் பதிந்து பாஸ்கரனை கைது செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT