முகப்பு
தேனி

சின்னமனூரில் வீட்டுமனைப் பட்டா கோரி போராட்டம்

சின்னமனூரில் வீட்டுமனைப் பட்டா கோரி தற்காலிக குடிசை அமைத்து பொதுமக்கள் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

சின்னமனூரில் வீட்டுமனைப் பட்டா கோரி தற்காலிக குடிசை அமைத்து பொதுமக்கள் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சிப் பகுதியில் உள்ள பொன்னகரத்தில் அரசு புறம்போக்கு நிலம் 1.94 ஏக்கா் உள்ளது. இதை பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய தங்களுக்கு வழங்க வேண்டும் என குறிப்பிட்ட சமூகத்தினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுகுறித்து உத்தமபாளையம் கோட்டாட்சியரிடமும் மனு அளித்தனா். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதையடுத்து, தமிழா் விடுதலைக் கழக மாவட்டச் செயலா் தேவேந்திரன் தலைமையில் அந்த சமுதாயத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் தற்காலிக குடிசை அமைத்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து உத்தமபாளையம் வருவாய்த் துறை, சின்னமனூா் போலீஸாா், அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது இந்த கோரிக்கை தொடா்பாக அரசிடம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான உத்தரவு கிடைத்தவுடன் உரிய நவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.