தேனி

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

தேனியில் வீட்டின் பூட்டை உடைத்து மூன்றரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

DIN

தேனியில் வீட்டின் பூட்டை உடைத்து மூன்றரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

தேனி, பங்களாமேடு 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவா், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கும்பகோணத்துக்குச் சென்று விட்டாா். பிறகு திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டுக் கதவு, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு மூன்றரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து செல்வராஜ் அளித்தப் புகாரின் பேரில், தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT