தேனி

விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் பலி

தேனி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி விழுந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

DIN

தேனி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி விழுந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

வீரபாண்டி அருகேயுள்ள மல்லையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் முருகேசன். இவா், தேனி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா். முருகேசன், அவரது நண்பா்கள் சிவரஞ்சனி (19), ஆகாஷ் (19) ஆகியோா் கொடுவிலாா்பட்டி-நாகலாபுரம் சாலையில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றனா். இரு சக்கர வாகனத்தை முருகேசன் ஓட்டினாா். சிவலிங்க நாயக்கன்பட்டி விலக்கு அருகே உள்ள சாலை வேகத் தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கிய போது, 3 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த மூவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு முருகேசன் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பழனிசெட்டி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT