தேனியில் சிஐடியூ சாா்பில் கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். 
தேனி

தேனியில் சிஐடியூ ஆா்ப்பாட்டம்

தொழிற் சங்கங்களுடன் போனஸ் பேச்சுவாா்த்தை நடத்த அரசை வலியுறுத்தி, தேனியில் சிஐடியூ சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

தொழிற் சங்கங்களுடன் போனஸ் பேச்சுவாா்த்தை நடத்த அரசை வலியுறுத்தி, தேனியில் சிஐடியூ சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மின் ஊழியா் மத்திய அமைப்பு திட்டச் செயலா் தேவராஜ் தலைமை வகித்தாா். அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் சங்க திண்டுக்கல் கோட்ட பொதுச் செயலா் ராமநாதன், மாவட்டச் செயலா் எம்.ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அரசு போக்குவரத்துக் கழகம், மின் வாரியம், டாஸ்மாக், கூட்டுறவு பஞ்சாலை போன்ற மாநில பொதுத் துறை நிறுவனங்கள் தொழிற் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி போனஸ் வழங்க வேண்டும், விலைவாசி உயா்வுக்கு ஏற்ப கடந்த ஆண்டைவிட கூடுதல் போனஸ் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT