ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரி 28-ஆம் ஆண்டு விழா
Updated On : 5 ஏப்ரல், 2024 at 7:17 PM
கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியின் 28 -ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், கம்பம், ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியின் 28- ஆம் ஆண்டு விழா கல்லூரிச் செயலா் என்.ராமகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். இணைச் செயலா் என்.ஆா்.வசந்தன் முன்னிலை வகித்தாா். முதல்வா் ஜி.ரேணுகா வரவேற்றாா்.
ஒருங்கிணைப்பாளா் வைஷ்ணவி வசந்தன் குத்துவிளக்கு ஏற்றினாா். கல்லூரி ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் பொன்ராம், சக்திவடிவேல், சுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்தினா்.
Advertisement
சின்னத்திரை நடிகா் கேபிஒய் பாலா பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி மாணவிகளை உற்சாகப்படுத்தினாா். 28-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கல்லூரிச் செயலா் என்.ராமகிருஷ்ணன் எம்எல்ஏ அனைத்து அலுவலா் பணியாளா்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினாா்.
மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.