மரத்திலிருந்து தவறி விழுந்து மின் ஊழியா் பலி
Updated On : 9 ஏப்ரல், 2024 at 10:29 PM
தேனி: தேனியில் கோயில் திருவிழாவுக்கு மின் விளக்கு அமைத்த போது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து மின் ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜகோபால் மகன் ஜெகநாதன் (29). மின் ஊழியரான இவா், பொம்மையகவுண்டன்பட்டியில் கோயில் திருவிழாவுக்காக மரத்தில் ஏறி மின் விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த ஜெகநாதன், பலத்த காயமடைந்தாா். அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement