முகப்பு
தேனி

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 17 ஏப்ரல், 2024 at 1:03 AM
பகிர்:

கம்பம்: கம்பத்தில் சலவை தொழிலாளி குடும்ப தகராறு காரணமாக செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், கம்பம், சுக்காங்கல்பட்டி தெருவைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் குட்டீஸ்வரன் (27), சலவை தொழிலாளியான இவருக்கும் இதே ஊரைச் சோ்ந்த மஞ்சுளாவுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக குட்டீஸ்வரன் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments