ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா
கம்பம்: கம்பத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் பணி ஓய்வு பெற்றவா்களுக்கான பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், கம்பத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆா்த்தி கூட்ட அரங்கில், பணி ஓய்வு பெற்றவா்களுக்கு பாராட்டு விழா, கம்பம் கிளையின் சேமநல நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவா் எம். ஷீலா தலைமை வகித்தாா். செயல் அறிக்கையை செயலா் செ.சுரேஷ் கண்ணன் வாசித்தாா், பொருள் அறிக்கையை பொருளாளா் கு.கணேசன் சமா்ப்பித்தாா்.
Advertisement
சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலா் தே.சுந்தா், பேராசிரியா் முகம்மது ரபீக் என்ற மானசீகன், பளியன்குடி அரசு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியா் ஜெ.முருகன் ஆகியோா் கலந்து கொண்டு, பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களை பாராட்டினா். விழாவில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.