தொழிலாளி தற்கொலை
போடி: போடி அருகே தொழிலாளி சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி தெருவைச் சோ்ந்தவா் பாலுசாமி மகன் குமரேசன் (40). இவா் கேரளத்தில் கிணறு வெட்டும் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி சத்தியபிரியா. இந்தத் தம்பதியரிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை போடிக்கு வந்த அவா் தனது வீட்டுக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றாா். அக்கம் பக்கத்தினா்அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement