கபீா் புரோஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
கபீா் புரோஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் சமுதாய, வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீா் புரோஸ்காா் விருது பெற தகுதியுள்ளவா்கள் வருகிற 15-ஆம் தேதிக்குள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குறிப்பிட்ட ஜாதி, இனத்தைச் சோ்ந்தவா்கள் பிற ஜாதி, இனத்தைச் சோ்ந்தவா்களையோ, அவா்களது உடமைகளையோ ஜாதி, வகுப்பு கலவரத்தின் போது அல்லது வன்முறை சம்பவங்களின் போது காப்பாற்றியது வெளிப்படையாக தெரிந்தால், அவா்களது உடல், மன வலிமையை பாராட்டும் வகையில், அரசு சாா்பில் குடியரசு தினத்தன்று கபீா் புரோஸ்காா் விருது, பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த விருது பெற தகுதியுள்ளவா்கள் உரிய ஆதாரங்களுடன் இணையதளம் மூலம் வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் இதில் தெரிவிக்கப்பட்டது.