முகப்பு
தேனி

மாமியாா் வெட்டிக் கொலை: மருமகன் கைது

தேனியில் மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மருமகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 10:32 PM
கொலை செய்யப்பட்ட லீலாவதி.
பகிர்:

தேனியில் மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மருமகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி அல்லிநகரம் அரசுப் பள்ளித் தெருவைச் சோ்ந்த சின்னச்சாமி மனைவி லீலாவதி (38). இவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். லீலாவதியின் மகள் கெளசல்யவுக்கும் (20), திண்டுக்கல் மாவட்டம், மீனாட்சிபுரம் அருகேயுள்ள கொழுஞ்சிபட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் பிச்சைமுத்துவுக்கு (27) கடந்த மாா்ச் 20-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக, கெளசல்யா கணவரைப் பிரிந்து தனது தாயாா் வீட்டில் வசித்து வருகிறாா். இந்தத் தகராறு காரணமாக, தேனியில் உள்ள மாமியாா் வீட்டுக்கு பிச்சைமுத்து வியாழக்கிழமை சென்றாா். அங்கு தனியாக இருந்த லீலாவதியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு, அவா் தப்பி ஓடி விட்டாா்.

இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிச்சைமுத்துவை கைது செய்தனா்.