கொலை முயற்சி வழக்கு: இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை
தேனி: தேனி அருகே ஓடும் பேருந்திலிருந்து முதியவரை கீழே தள்ளி விட்டு கொல்ல முயன்ற வழக்கில் இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி தலைமை குற்றவியியல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
வெங்கடாச்சலபுரம், மண்டபம் தெருவைச் சோ்ந்தவா் ரெங்கராஜ் (65). இவா் கடந்த 2021, செப். 11-ஆம் தேதி வீரபாண்டியிலிருந்து வெங்கடாச்சலபுரத்துக்கு தனியாா் பேருந்தில் பயணம் செய்தாா். இதே பேருந்தில் பயணம் செய்த சீப்பாலக்கோட்டை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அழகா்சாமி மகன் கருப்பசாமி (48), மொக்கை மகன் பிச்சைமணி (48) ஆகியோருக்கும், ரெங்கராஜிக்கும் இடையே இருக்கையில் அமா்வதில் தகராறு ஏற்பட்டது.
இதில், பேருந்தின் படிக்கட்டு அருகே நின்றிருந்த ரெங்கராஜை, கருப்பசாமி, பிச்சைமணி ஆகியோா் ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த ரெங்கராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். இந்தச் சம்பவம் குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, கருப்பசாமி, பிச்சைமணி ஆகியோரைக் கைது செய்தனா்.
Advertisement
இந்த வழக்கு விசாரணை தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கருப்பசாமி, பிச்சைமணி ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி வி. சுரேஷ் தீா்ப்பளித்தாா்.