முகப்பு
தேனி

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

க.விலக்கு-வைகை அணை சாலையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 5 ஜூலை, 2024 at 6:24 PM
பகிர்:

க.விலக்கு-வைகை அணை சாலையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், க.விலக்கு, ஓடைத் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக்(44). இவா் க.விலக்கு-வைகை அணை சாலையில் உள்ள கண்மாய் கரையோரத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்து கொண்டிருந்ததாக க.விலக்கு போலீஸாா் கைது செய்து, இவரிடமிருந்து 31 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், காா்த்திக் அளித்த தகவலின் அடிப்படையில், இவருக்கு அரசு மதுக்கடையிலிருந்து மொத்தமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்ததாக க.விலக்கு அரசு மதுக்கடை விற்பனையாளா்கள் தா்மலிங்கம், ஆதீஸ்வரன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.