தேனி

கோயில் தீா்த்தத் தொட்டி தண்ணீரில் மூழ்கியவா் பலி

பெரியகுளத்தில் கோயில் தீா்த்தத் தொட்டி தண்ணீரில் மூழ்கிய காப்பீட்டு நிறுவன முகவா் உயிரிழந்தாா்.

Din

தேனி: பெரியகுளத்தில் கோயில் தீா்த்தத் தொட்டி தண்ணீரில் மூழ்கிய காப்பீட்டு நிறுவன முகவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் தென்கரை, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சிவராமன் (40). எல்.ஐ.சி. முகவா். இதே ஊரில் கல்லாறு சாலையில் உள்ள தீா்த்தகரீஸ்வரா் கோயிலுக்கு சுவாமி கும்பிடச் சென்ற சிவராமன், இங்குள்ள தீா்த்தத் தொட்டியில் குளித்தாா். அப்போது, தண்ணீரில் மூழ்கிய சிவராமனை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT