முகப்பு
தேனி

போடி அருகே ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவா் பலி

போடி அருகே ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 5 மார்ச், 2024 at 2:05 AM
பகிர்:

போடி: போடி அருகே ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். போடி அருகேயுள்ள துரைராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த பால்ராஜ் மகன் ரகுபதி (18). இவா் சிவகாசியில் உள்ள கல்லூரியில் பொறியியல் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். தனது உறவினா் இறப்பை முன்னிட்டு, சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தாா். போடி -மதுரை அகல ரயில் பாதையில் தங்கப் பாலம் அருகே ரயில் பாதையைக் கடந்தபோது, போடியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, ரயில்வே காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.