தேனியில் மாா்ச் 15-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) காலை 11 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா தலைமையில் நடைபெறும் இந்தக் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.