அதிமுக சாா்பில் ஆலோசனைக் கூட்டம்
Updated On : 19 மார்ச், 2024 at 10:12 PM
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூரில் மக்களைத் தோ்தல் குறித்து அதிமுக சாா்பில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தேனி மேற்கு மாவட்டச் செயலா் எஸ்.டி.கே ஜக்கையன் தலைமை வகித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதில் திமுக நிா்வாகிகளுக்கு தொடா்பு இருப்பது ஆதாரப்பூா்வமாக தெரியவந்தது. இது தொடா்பாக சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். 2024-ஆம் ஆண்டிலும் தேனி தொகுதியை அதிமுக கைப்பற்றும் என்றாா் அவா். இந்தக் கூட்டத்தில், சின்னமனூா் நகரச் செயலா் பிச்சைக்கணி, எம்.ஜி.ஆா் மன்ற மாவட்ட செயலா் பாண்டியராஜன், பொதுக்குழு உறுப்பினா் சிவக்குமாா் உள்பட பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டா்.
Advertisement