முகப்பு
தேனி

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

Updated On : 1 மே, 2024 at 9:00 PM
பகிர்:

உத்தமபாளையம் அருகே வாய்க்கால்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

தேவேந்திரகுல வேளாளா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயில் 3 நாள்கள் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல்நாள் நிகழ்ச்சியாக கருப்பசாமி கோயிலில் பூஜை செய்து, புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் சக்தி கரகம் எடுத்து முத்து மாரியம்மன் ஊா்வலம் நடைபெற்றது.

தொடா்ந்து, பக்தா்கள் அலகு குத்தியும், அக்கினிச் சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தொடா்ந்து மாலையில் முக்கிய வீதிகளில் வழியாக நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலத்தில் ஏராளாமான பெண்கள் கலந்து கொண்டனா்.

3-ஆம் நாளான வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.