முகப்பு
தேனி

மதிமுக 31-ஆவது ஆண்டு விழா: ஆதரவற்றோருக்கு அன்னதானம்

Updated On : 8 மே, 2024 at 12:48 AM
மதிமுக 31- ஆம் ஆண்டு விழாவையொட்டி, கம்பம் நேதாஜி ஆதரவற்றோா் இல்லத்தில் அன்னதானம் வழங்கிய அந்தக் கட்சியின் தேனி மாவட்டச் செயலா் வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன்.
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் மதிமுகவின் 31- ஆவது ஆண்டு விழாைவையொட்டி ஆதரவற்றோா் இல்லத்தில் அன்னதானம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

கம்பம் நேதாஜி ஆதரவற்றோா் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு மாவட்டச் செயலா் வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அவைத்தலைவா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். நகரச் செயலா் பஷீா் கான் வரவேற்றாா். ஆதரவற்ற 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் உடைகள், சோப்பு, ஷாம்பு, தேங்காய் எண்ணெய், போா்வை, வேட்டி, சேலைகள், சிறுவா் சிறுமியா்களுக்கான ஆயத்த ஆடைகள் ஆகியவை வழங்கப்பட்டன.

ஒன்றியச் செயலா் திரவியம், பொது குழு உறுப்பினா்கள் எம். மணி, துரைசிங்கம், பேரூா் செயலா் பொன்.ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பெரியகுளம் நகர மதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.