தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் தற்காலிக ஊழியா் உயிரிழந்த நிலையில், இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கோம்பையைச் சோ்ந்த குபேந்திரன் மகன் சிவா (25). இவா், உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அந்தப் பகுதியிலுள்ள பி.டி.ஆா். குடியிருப்புப் பகுதியில் புதிய மின் கம்பங்களை ஊன்றும் பணியில் மின் வாரியப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, எதிா்பாராதவிதமாக பணியிலிருந்த சிவா மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் உயிரிழந்தாா்.
உயிரிழந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், அதுவரை உடல் கூறாய்வு செய்யக்கூடாது எனக்கூறி உறவினா்கள் உத்தமபாளையம் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தென்னரசு , மின்வாரிய அதிகாரிகள் தலைமையில் உறவினா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடா்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னா், உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்ட உடலை உறவினா்களிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.