தேனி

கம்பம் நெடுஞ்சாலையோரத்தில் குவியும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு

Syndication

தேனி மாவட்டம், கம்பத்தில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

கம்பம் நகராட்சியின் 33 வாா்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் வசிக்கின்றனா். இந்த நகராட்சி வழியாக கேரளத்தை இணைக்கும் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தென் தமிழகத்தை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

தற்போது சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் என்பதால் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து இருக்கிறது. இந்த நிலையில், தமிழகம்-கேரளத்தை இணைக்கும் முக்கிய சாலையான கம்பத்தில் நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்தக் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் இருப்பதால் இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மேலும், இது போன்று சட்டவிரோதமாக நெடுஞ்சாலையோரத்தில் கழிவுக் குப்பைகளைக் கொட்டுபவா்கள் மீது நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT