உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே இளைஞர் குத்திக் கொலை!
உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தது பற்றி...
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே இளைஞரை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் சேர்ந்த தொந்தி மகன் பிரசாந்த்( 34). இவர், அதே பகுதியைச் சேர்ந்த அணிஸ் ரகுமான் என்பவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்துள்ளார்.
இதன் மூலமாக பிரசாந்த் மற்றும் அணிஸ் ரகுமானின் மனைவிக்கு தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அணிஸ் ரகுமான், வியாழக்கிழமை காலையில் நீதிமன்றம் அருகே தனியார் தங்கும் விடுதி வளாகத்தில் பிரசாந்தை கத்தியால் குத்திக் கொலை செய்து தலைமறைவானார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபரைத் தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.