பிரசாந்த்  
தேனி

உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே இளைஞர் குத்திக் கொலை!

உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தது பற்றி...

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே இளைஞரை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சேர்ந்த தொந்தி மகன் பிரசாந்த்( 34). இவர், அதே பகுதியைச் சேர்ந்த அணிஸ் ரகுமான் என்பவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்துள்ளார்.

இதன் மூலமாக பிரசாந்த் மற்றும் அணிஸ் ரகுமானின் மனைவிக்கு தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அணிஸ் ரகுமான், வியாழக்கிழமை காலையில் நீதிமன்றம் அருகே தனியார் தங்கும் விடுதி வளாகத்தில் பிரசாந்தை கத்தியால் குத்திக் கொலை செய்து தலைமறைவானார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

SCROLL FOR NEXT