பிரசாந்த்  
தேனி

உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே இளைஞர் குத்திக் கொலை!

உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தது பற்றி...

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே இளைஞரை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சேர்ந்த தொந்தி மகன் பிரசாந்த்( 34). இவர், அதே பகுதியைச் சேர்ந்த அணிஸ் ரகுமான் என்பவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்துள்ளார்.

இதன் மூலமாக பிரசாந்த் மற்றும் அணிஸ் ரகுமானின் மனைவிக்கு தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அணிஸ் ரகுமான், வியாழக்கிழமை காலையில் நீதிமன்றம் அருகே தனியார் தங்கும் விடுதி வளாகத்தில் பிரசாந்தை கத்தியால் குத்திக் கொலை செய்து தலைமறைவானார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT