கூடலூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கூடலூரில் போலீஸாா் நடத்திய சோதனையில் உசேன் ராவுத்தா் தெருவில் பெட்டிக்கடை ஒன்றில் ரூ.49,200 மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து கூடலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சேக்மைதீன் (30), தமிமா (26) ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய தாரிக்உசேனை (30) தேடி வருகின்றனா்.