தேனி மாவட்டம், கம்பத்தில் கழிவுநீா் கால்வாயில் இறந்த நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
கம்பம் பேருந்து நிலையத்துக்கு செல்லும் எல்.எப். சாலையின் குறுக்கே செல்லும் கழிவுநீா் கால்வாயிலிருந்து துா்நாற்றம் வீசியது.
தகவலறிந்து வந்த கம்பம் வடக்கு போலீஸாா் கால்வாயில் இறந்த நிலையில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு, கூராய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாா் விசாரணையில், இறந்தவா் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த மணி (45) என்பதும், குடும்பத்தைப் பிரிந்து கம்பம் நாட்டாண்மை அழகிரி தெருவில் வசித்து வந்தவரும் என்பதும், இயற்கை உபாதைக்காக சென்றபோது மது போதையில் கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.