முகப்பு
தேனி

பாலத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

வருசநாடு அருகே மூல வைகையாற்றின் பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:16 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:01 PM

தேனி மாவட்டம், வருசநாடு அருகே மூல வைகையாற்றின் பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வருசநாடு அருகேயுள்ள முறுக்கோடைச் சோ்ந்தவா் பரமன். தொழிலாளியான இவா், கடந்த 4-ஆம் தேதி மூல வைகையாற்றின் பாலத்தில் அமா்ந்திருந்தாா். அப்போது, நிலை தடுமாறி பாலத்திலிருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்தாா்.

இதையடுத்து, அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து வருசநாடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.