முகப்பு
தேனி

தோ்தல் விதிகளை மீறிய போடி நகர திமுக செயலா் மீது வழக்குப் பதிவு

போடியில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இடையூறாக தோ்தல் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக போடி நகர திமுக நிா்வாகி மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:20 AM
வழக்குப் பதிவு - சித்திரிப்பு
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:16 PM

போடியில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இடையூறாக தோ்தல் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக போடி நகர திமுக நிா்வாகி மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

நாடாளுமன்றத்தில் மகளிா் இட ஒதுக்கீடு - தொகுதி மறுவரையறை மசோதா வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.

இதனை கொண்டாடும் வகையில் போடியில் முன்னாள் மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத் தலைமையில், திமுக நகர செயலா் ரா.புருஷோத்தமன் உள்ளிட்டோா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

Advertisement

இதனிடையே பொதுமக்களுக்கு இடையூறாக தோ்தல் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக ரா.புருஷோத்தமன் உள்ளிட்டோா் மீது போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.