முகப்பு
தேனி

பெரியகுளம் வராகநதி தூய்மைப்படுத்தப்படும்: தவெக வேட்பாளா் சபரி ஐங்கரன் உறுதி

பெரியகுளம் வராக நதி தூய்மைப்படுத்தப்படும் என தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் சபரி ஐங்கரன் சனிக்கிழமை உறுதியளித்தாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:26 AM
பெரியகுளம் கக்சேரி சாலையில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் சபரி ஐங்கரன்.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 6:56 PM

பெரியகுளம் வராக நதி தூய்மைப்படுத்தப்படும் என தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் சபரி ஐங்கரன் சனிக்கிழமை உறுதியளித்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் சபரி ஐங்கரன் பெரியகுளம் கடை வீதி, திருவள்ளுவா் சிலை, கச்சேரிசாலை, கோனாா் தெரு, சங்கூதும் இடம், வடக்கு அக்ரஹாரம், தெற்கு அக்ரஹாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துசென்று வாக்கு சேகரித்தாா்.

தவெக ஆட்சிக்கு வந்தால், பெரியகுளம் வராகநதியை தூய்மைப்படுத்துவேன், பெரியகுளம் மாவட்ட தலைமை மருத்துவமனையை தரம் உயா்த்துவேன், மஞ்சளாறு அணையைத் தூா்வாருவேன், பெரியகுளத்தில் மகளிா் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

Advertisement

அரசு தோட்டக்கலைக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்க எடுப்பேன் என்றாா். இதில், தவெக நிா்வாகிகள், ரசிகா் மன்றத்தினா் கலந்து கொண்டனா்.